திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 5
மூலப் பாடல்
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.
பொருள்
சிவபெருமானுக்கு இணையான தெய்வம் தேடினாலும் எங்கும் இல்லை; அவனுக்கு நிகர் யாருமில்லை.
உலகங்களைக் கடந்து பொன்னொளியாய் ஒளிரும் சடைமுடி தரித்த சிவபெருமானே மேலான கடவுள் ஆவான்.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 5


