திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 2
மூலப் பாடல்
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
பொருள்
உயிர்களின் உயிராகவும் பார்வதியின் நாதனாகவும் விளங்கும் இறைவனைப் போற்றுகிறேன்.
எமனை காலால் உதைத்து வென்ற அந்தச் சிவபெருமானைப் பற்றியே நான் கூறுகிறேன்.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 2


